இறை தத்துவங்களைப் படித்து உள்வாங்கிக்கொண்டு செயல்படுதல் ஆகியவை ஆன்மவாழ்க்கை வாழும் அனைவருக்கும் ''ஞானம்’’ எனும் தன் இறுதி இலக்கை அடைய இன்றியமையாத ஒன்றாகும்.
அதேபோல், லெளகீக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள கோடானு கோடி மக்களுக்கு, தன் வாழ்க்கையை பசியின்றி, அறிவுச் செழிப்போடு, வசதி வாய்ப்புகளோடு கடந்து செல்லத் தேவையான செல்வத்தைச் சேர்ப்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. அந்த முயற்சியில் ஸதா சர்வகாலமும் ஈடுபட்டுள்ள மனிதர்கள் ''ஞானத்தை’’ பற்றியும், ''தன்னைத் தானே அறிதல் அல்லது அகத்தாய்வு’’ பற்றியும் சிறிதளவும் சிந்தையே செய்யாமல், தன் வாழ்நாளை கழித்துவிட்டு, முதுமைக்காலத்தில் மட்டுமே, ஆன்மாவைப்பற்றி சிந்தனை செய்ய ஆரம்பிக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையான செல்வம் சேர்க்கும் அதே வேளையில், தன் ஆன்ம முன்னேற்றத்திற்காகவும் நேரம் ஒதுக்கி செயல்படும் விழிப்புணர்வு உண்டாக வேண்டும் என்ற நல்ல நோக்கில் எழுதப்பட்டதுதான் ''நாம் எதை நோக்கி ஓடுகிறோம்’’