ஸ்ரீ தத்தாத்ரேயரின் வாழ்வின் நிகழ்வுகள் மற்றும் அருட் செயல்களை விளக்கும் ‘குரு சரித்ரா’ என்னும் நூலாக ஸ்ரீ சாயம் தேவனின் வழித்தோன்றலான ஸ்ரீ நாமதாரகன் என்பவர் ஓவி என்ற செய்யுள் வடிவில் மராத்தி மொழியில் இயற்றினார். இது குருவான சித்தருக்கும், சிஷ்யனான நாமதாரகன் எனப்படும் கங்காதர ஸரஸ்வதிக்கும் இடையே நடக்கும் சம்பாஷணை வடிவிலானது. ‘ஸ்ரீ குரு தத்தாத்ரேயரின்’ புகழ் பேசும் இந்த குரு சரித்திரத்தை தமிழ் பேசும் அனைத்து பக்தர்களிடம் எடுத்து செல்லும் ஒரு சிறு முயற்சியே இந்நூலாகும். இப்புத்தகம் ஸ்ரீ குரு தத்தாத்ரேயரின் மீது சிறந்த பக்தியும், நம்பிக்கையும் தோற்றுவிக்கும் வண்ணம் அமைய மும்மூர்த்திகளின் ஸ்வரூபமான அவரின் இணையடித் தாமரைகளையே இறைஞ்சி வேண்டிக் கொள்கிறேன்.
‘ஸ்ரீ குரோ: பரதரம் நாஸ்தி
நாஸ்தி தத்வம் பரம் குரும்’
(ஸ்ரீ குருவைக் காட்டிலும் மேலானது ஏதுமில்லை. அவரினும் மேலான தத்துவமும் இல்லை).